ஊதிய உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களும் பணியில் நீட்டிக்கலாம் எனவும், ஆனால் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் எனவும் உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்திருக்கிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதனை காரணம் காட்டி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விசாரித்த நீதிபதிகள் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அந்த மனுத்தாக்களை தள்ளுபடி செய்தது.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2023 – ரூ. 21000/- ஊதியம்!
மேலும், இதனை எதிர்த்து மீண்டும் ஆசிரியர்கள் தரப்பிலிருந்து மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் 2011ம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும் பணியில் நீட்டிக்கலாம் எனவும், உயர் ஊதியம் பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு அவசியமில்லை எனவும் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், இந்த ஆசிரியர்கள் பணியில் நீட்டிக்கலாமே தவிர பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் எனவும் நீதிபதிகள் சார்பில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.