தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டர் குறித்த வழக்கு – அரசுக்கு வந்த சிக்கல்!
தமிழகத்தில் டாஸ்மாக் டெண்டர் விடுவதற்கான செயல்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதனால் அரசுக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது.
டாஸ்மாக் சிக்கல்
தமிழக அரசு சார்பில் மதுபான கடைகள் இயங்கி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடைகளுடன் சேர்ந்து பார்கள் இயங்கி வருகின்றன. இந்த பார்கள் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு, அதன் மூலம் அரசு வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் டாஸ்மாக் பார்களின் லைசென்ஸ் காலாவதியானது. அதனால் பார்கள் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் புதிதாக டெண்டர் விட செயல்பாடுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலையில் திடீர் மாற்றம் – விலைநிலவர பட்டியல் வெளியீடு!
இந்த வழக்கு இறுதி உத்தரவிற்கு காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சமீபத்தில் சட்ட விரோத பார்களின் செயல்பாடுகள் முடக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் பார்களை முழுமையாக மூட முடியவில்லை. சட்ட விரோத பார்களால் பல பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தற்போது பார்களை மூட வேண்டும் என மது பிரியர்களுக்கு அரசு தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.