நவ.17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
நவ.17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நவ.17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நவ.17 முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் அடைப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவலுக்கு மத்தியில் கடந்த மே மாதம் முதல் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது மீண்டுமாக செயல்பட்டு வரும் மதுக்கடைகளில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை படுஜோராக நடந்தது.

நவ.19 மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – முதல்வர் உத்தரவு!

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி முதல் 4 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும்படிக்கு அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் கார்த்திகை தீபதிருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.

Reliance Jio வழங்கும் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்கள் – தினமும் 1.5 ஜிபி டேட்டா!

இந்த திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று (நவ.10) நடைபெற்றுள்ள நிலையில் வரும் நவ.19ம் தேதியன்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருவதால் அம்மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!