பிப்ரவரி 28ம் தேதி முனைவர் பட்ட படிப்பிற்கான நுழைவுத்தேர்வு – தமிழ் பல்கலை அறிவிப்பு!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு கொரோனா காரணமாக தள்ளிப்போனதால் தற்போது பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனைவர் பட்ட நுழைவுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதால் தற்போது மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மத்திய கல்வி நிறுவனங்களில் பயில ஜேஇஇ தேர்வு போன்றவை நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் நேற்று இந்தியாவின் 72வது குடியரசு தினவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் கூறுகையில், “உயர்கல்வி திட்டமான ரூசா திட்டத்தின் கீழ் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ள தமிழக அரசின் ரூ.20 கோடி நிதியில் ஆய்வு கருவிகள், கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இறுதியாண்டு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டதாக சான்றிதழ் – அண்ணா பல்கலை மாணவர்கள் குழப்பம்!!
மேலும் பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டரங்கம், ஆய்வகங்கள், வகுப்பறைகள், ஆகியவற்றை மேம்படுத்த பணி நடைபெற்று விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளன. புதிய நூல்கள் வெளியீடு நீண்ட நாட்கள் காத்திருப்பில் உள்ளன. அவைகளும் மறுபதிப்புகளும் விரைவில் வெளியிட உள்ளன.
தமிழக அரசு கல்லூரியில் 500 கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் – நியமனம் வழங்க எதிர்ப்பு!!
கொரோனா நோய் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள முனைவர் பட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் வருகிற பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும். வருகிற காலங்களில் தமிழ் பல்கலைகழகத்தில் பல மேற்பட்ட ஆய்வுப்பணிகள், கல்விப்பணிகள் நடைபெறும் என நம்பிக்கை கொள்வோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்