தமிழக மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அச்சம்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது திறக்கப்பட்டு 2 மாதங்கள் மட்டுமே முடிவடைந்துள்ளது. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இருந்த போதிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 9 மாணவ-மாணவியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதே கல்லூரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா கண்டறியபட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!
தற்போது மீண்டும் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர் தனிமைப்படுத்தபட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த கல்லூரியில் உள்ள மாணவர்கள் 63 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.