தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்கும் நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!!
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்க இருக்கும் அனைத்து நாட்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ள நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்தல் பணிகள் நான்கு கட்ட பயிற்சி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!
தேர்தல் பணிகள்:
சட்டசபை தேர்தலின் போது பொதுவாக மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், முன்னாள் எல்லைப்படை வீரர்கள் போன்றவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் பணிகளில் ஈடுபட இருக்கும் பணியாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் சேகரித்து தயாரித்து விட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கும்.
விடுமுறை அறிவிப்பு:
நடப்பு ஆண்டில் தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டமாக மார்ச் 18, 26, ஏப்ரல் 3 மற்றும் 5ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்