பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல்:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி இரண்டு ஊர்களிலும் தேர்தல் ஒரே நாளில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிய துணை நிலை ஆளுநராக தமிழிசை அவர்கள் பதவி ஏற்றுள்ளார்.
நீட் 2021 தேர்வு தேதி – என்.டி.ஏ வெளியீடு !
தேர்தல் பணி:
சட்டசபை தேர்தலின் போது பொதுவாக மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், முன்னாள் எல்லைப்படை வீரர்கள் போன்றவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் பணிகளில் ஈடுபட இருக்கும் பணியாளர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணையம் சேகரித்து தயாரித்து விட்டது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கும்.
பள்ளிகள் விடுமுறை:
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பணியாற்ற உள்ள அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சிகள் வகுப்புகள் நடக்க இருக்கிறது. பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ அவர்கள் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்