தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் காற்றின் சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாத காலத்தில் தான் அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது கேரளா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்கள் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டதுடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியஸ், எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்ஸியஸ் ஒட்டியே இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூர் பகுதியில் 2 செ.மீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.