தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்று முதல் கடந்த 5 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்து மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதத்தின் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் தற்போது சூரியனின் வெப்பம் அதிகமாகி வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வெப்பத்தின் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய உள்ள பகுதிகள், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டபுள் ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் அமல்!
அடுத்தாக, மார்ச் 27 ஆம் தேதி அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி,தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு
இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனை அடுத்து 28.03.2022 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அடுத்தாக, மார்ச் 29 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதனை தொடர்ந்து, மார்ச் 30 ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தலைநகர் சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு(சென்டிமீட்டர்) வெளியாகி உள்ளது. சூலூர் 3, குந்தா பாலம், கோயம்புத்தார் விமானநிலையம், திருப்பூண்டி தலா 2, கொடைக்கானல், ஆழியாறு,வேளாங்கண்ணி, மன்னார்குடி, சின்னகோரை , சாம்ராஜ் எஸ்டேட், அவலாஞ்சி தலா 1. அதனை தொடர்ந்து மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.