அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? SBI வெளியிட்ட எச்சரிக்கை!

0
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? SBI வெளியிட்ட எச்சரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? SBI வெளியிட்ட எச்சரிக்கை!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? SBI வெளியிட்ட எச்சரிக்கை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2004ம் ஆண்டு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தற்போது இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசு ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்படுகிற நடைமுறை இருந்தது. இதனை கடந்த 2004ம் ஆண்டு ரத்து செய்து தேசிய ஓய்வூதியத் திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்பலப்படுத்தியது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கின் கீழ் அத்தொகை சேமிக்கப்படுகிறது. மேலும் இதில் அரசு சார்பாகவும் கூடுதல் தொகையை செலுத்தப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும்போது வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டபுள் ஜாக்பாட் அறிவிப்பு விரைவில் அமல்!

இதனால் அரசு ஊழியர்கள் தங்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்றும் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அத்துடன் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்களுக்கு பணிக்கொடை, மாதந்தோறும் ஓய்வூதியம், தங்களுக்கு பிறகு அவர்களின் குடும்பத்து உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் அமல்படுத்தபட்டு வருகிறது. மேலும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் தனது தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் சௌமியா காந்தி கோஷ் கூறியதாவது, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது நிதித் தற்கொலைக்கு சமமானது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது நாட்டின் வளர்ச்சிக்கும், இளைய தலைமுறையினர் மீது பெரிய சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!