தமிழகத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் – தக்காளி விலை இவ்வளவா?
தமிழகத்தில் காய்கறி விலையானது கடந்த இரண்டு மாதங்களாக உச்சம் தொட்டுள்ளது. அந்த வகையில் இன்று (செப்.12) விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
விலை நிலவரம்:
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக காய்கறி விலையானது எதிர்பாராத உச்சத்தை தொட்டுள்ளது.அந்த வகையில் சென்னை கோயம்பேடில் இன்று (செப் 12) காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.30க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Join Our WhatsApp Group” for Latest Updates
அதே போல பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.35க்கும், பீட்ருட் ஒரு கிலோ ரூ. 35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.30க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ ரூ.30க்கும், பாகற்காய் ஒரு கிலோ ரூ.30க்கும், விற்பனை செய்யப்படுகிறது. சுரைக்காய் ஒரு கிலோ ரூ.20க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் வரும் நல்ல செய்தி – முழு விவரம்!
ஒரு கிலோ இஞ்சி நேற்று ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலையானது அதிரடியாக குறைந்து ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனை ஆகிறது.