குருவாயூர், நெல்லை, செங்கோட்டை பகுதிகளில் ரயில் சேவை மார்ச் 29 முதல் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
குருவாயூர் – எழும்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் பராமரிப்பு பணி காரணமாக வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் நெல்லை – எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மாநில அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் படிப்படியாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு படிப்படியாக அவை இயல்புநிலைக்கு வந்தது.
TN Job “FB Group” Join Now
ஆனால் ரயில் சேவை தற்போது வரை இயக்கப்படவில்லை. முக்கிய நகரங்களுக்கு மட்டும் தற்போது விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திருமங்கலம் – துலுக்கப்பட்டி பகுதிகளுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த அறிவிப்பு:
வண்டி எண்: 06063 – சென்னை எழும்பூர் to நாகர்கோவில் (25 ஆம் தேதியும்)
வண்டி எண்: 06064 – நாகர்கோவில் to எழும்பூர் (26 ஆம் தேதியும்)
வண்டி எண்: 06065 – தாம்பரம் to நாகர்கோவில் (28, 29 தேதிகளில்)
வண்டி எண்: 06066 – நாகர்கோவில் to தாம்பரம் (29,30 தேதிகளிலும்) முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.