தங்கத்தின் விலையில் இப்படி ஒரு மாற்றமா? – ஷாக்காகும் பொதுமக்கள்!
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடியான மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது மக்களுக்கு சாதகமாக உள்ள நிலையிலும் நம்ப முடியாமல் மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கத்தின் விலை பொதுவாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வணிக சந்தை விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை விலையை விட சவரனுக்கு ரூபாய் 560 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிரடி விலை குறைவு காரணமாக இதுதான் தங்கம் வாங்க சரியான நேரம் என்று பொதுமக்கள் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 46120க்கும், ஒரு கிராம் ரூபாய் 5265க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் எப்போது? வலுக்கும் கோரிக்கை!!
இதே போல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 49880 க்கும், ஒரு கிராம் ரூபாய் 6235க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வெள்ளியின் விலை விற்பனையில் கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு கிராம் வெள்ளி 78 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 78,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.