தமிழகத்தில் கோவில்களுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் கோவில்களுக்குள் இந்து அல்லாதோர் செல்ல தடை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதோர் செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஆடை கட்டுப்பாடு தற்போது அமலில் இருக்கும் நிலையில், மேலும் ஒரு கட்டுப்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதவர்கள் செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கோவில்களிலும் இந்த தடை குறித்த அறிவிப்பு பலகைகளை  வைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற பலகை வைக்கப்பட்ட நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு பின் நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!