தமிழக கோவில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி – அறநிலைத்துறை உத்தரவு!!

0
தமிழக கோவில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி - அறநிலைத்துறை உத்தரவு!!
தமிழக கோவில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி - அறநிலைத்துறை உத்தரவு!!
தமிழக கோவில் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி – அறநிலைத்துறை உத்தரவு!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கோவில்களில் திருமணம் நடைபெறும் போது 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அறிவித்துள்ளது.

அறநிலைத்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. கோவில்களில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும், திருவிழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவில்களுக்கு பக்தர்கள் வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிலுக்கு செல்ல நாளை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9, 10ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை எச்சரிக்கை!!

கோவில்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவில் மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் மட்டும் 50 பேர் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் திருமணத்திற்கு முன்கூட்டியே விண்ணப்பித்து திருமணம் நடைபெறும் நேரத்தில் மட்டும் தனிமனித இடைவெளி பின்பற்றி பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!