தமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. அதன்படி இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு உயர்படிப்புகளை கருத்தில் கொண்டு வகுப்புகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன, இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தபால் தேர்தல் முறை – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் பள்ளிகள் தேர்தல் பணிகளுக்காக வாக்குசாவடிகளாக மாற்றப்படும்.
‘வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை & அனைவருக்கும் வீடு ‘ – 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!
இதன் காரணமாக பள்ளிகளில் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பள்ளிகளில் இந்த மாதம் 22 ஆம் தேதிக்குள் பருவத்தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் இருந்து தான் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதால் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்தி முடித்த பின்னர் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
School not open +2. All pass . students health is very important so lock down please.
12th all pass potta nallathan erukkanum aana enna pantrathu collage Lalan padikkanum 12th exam alhzthithan aakanum okay