தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் இந்த நேரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் மேல்நிலை வகுப்பு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வகுப்புகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டன. அதன்பின்னர் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
ஆனாலும் பள்ளிகளில் பல மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது என எச்சரித்து வருகின்றன. இந்த நேரத்தில் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் அரசிடம் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.