9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!
தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் பள்ளிகள் கொரோனா காரணமாக 10 மாதங்களாக மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 19-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்நிலையில் 10 மாதங்களாக மாணவர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர் எனவே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
வீடு கட்ட கடன் பெறும் நடைமுறை – அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த 19 ஆம் தேதி திறக்கப்பட்டன. அதன்பின் திண்டுக்கல் மாவட்டத்தில் சில ஆசிரியர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது. அதற்கு சிலர் பள்ளிகள் திறப்பது காரணமாக கூறுகின்றனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி – முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை!!
ஆனால் வீட்டில் இருந்தால் கூட கொரோனா வரும். எனவே பள்ளிகள் திறப்பு அதற்கு சம்மந்தம் இல்லை. எனவே 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும். அது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்