தமிழகத்தில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழகத்தில் அடுத்த புதிய கல்வியாண்டுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை இது குறித்து ஆலோசித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர் நோய் பரவல் குறைந்ததால் படிப்படியாக பள்ளிகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. பின்னர் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதனை பின்பற்றி மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க தொடங்கின.
ஜிப்மர் மருத்துவமனையில் சான்றிதழ் படிப்புகள் – மார்ச் 15 ஆம் தேதி கடைசி நாள்!!
தமிழகத்திலும் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதற்கடுத்த படியாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணையை வெளியிட்ட அரசு, 9 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
தற்போது நடப்பு கல்வியாண்டு முடிவடைய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை இதுவரை முடிவெடுக்காமல் உள்ளது. கட்டாயக்கல்வி சட்டத்தின் படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆல் பாஸ் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பள்ளிக்கல்வி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு முடிவு!!
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் கேட்ட பொழுது, ஜூன் அல்லது ஜூலையில் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறினார். தற்போது தேர்தல் பணிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரிகள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்படும்.
புதுச்சேரி பள்ளிகளில் NMMS தேர்வுகள் – மார்ச் 10 ஆம் தேதி கடைசி நாள்!!
இதனால் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் இம்முறை தாமதமாக திறக்கப்படும் என கூறப்படுகிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதற்கடுத்த நாளே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால் அதன் தேதிகளை மாற்றி அமைத்து, புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு தேதியை அரசு உடனே அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
[table id=1078 /