தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை – கல்வித்துறை உத்தரவு!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி செல்லும் போது இடைநிற்றலை தடுக்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்த சலுகை பெற விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் சரியாக இல்லாததால் அதனை சரி பார்த்து அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை உத்தரவு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. வழக்கமாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி செல்லும் போது சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
அதற்கு தகுதி உள்ள மாணவர்களின் விவரங்கள் தயார் செய்து அந்தந்த பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் சில மாணவர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி பாடங்கள் குறித்த கருத்து கேட்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “2020-21 கல்வி ஆண்டிற்கான சிறப்பு ஊக்கத்தொகை பெற 10, 11, 12-ம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா – 144 பேர் உயிரிழப்பு!!
அதில் சில மாணவர்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட சில முக்கியமான விவரங்கள் சரியாக பூர்த்தி செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே விடுபட்ட முழு விவரங்களையும் சரி பார்த்து அவற்றைத் தொகுத்து அனுப்ப முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என தெரிவித்துள்ளனர்.