9 முதல் 11ம் வகுப்பு வரை ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு மறுபரிசீலனை – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
தனியார் பள்ளிகள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாத காரணத்தால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு குறித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற விழாவின் போது பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
TN Job “FB Group” Join Now
இதன்படி தமிழக அரசு வெளியிட்ட ஆல் பாஸ் அறிவிப்பின் படி 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. மாணவர்களுக்கு தேர்வுகளில் போட்டியிடும் மனப்பான்மையும் குறைந்து விட்டது. ஏற்கனவே கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகள் பெரும் நிதி சுமையில் உள்ளன.
அரசு பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை ‘கணினி அறிவியல்’ பாடம் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தற்போது இந்த அறிவிப்பு காரணமாக மாணவர்கள் பள்ளி கட்டணத்தை முழுமையாக கட்டாமல் உள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் மேலும் பெரும் பாதிப்பை சந்தித்தனர். எனவே தனியார் பள்ளிகளில் பாதிப்புகளை கண்டறிய குழுக்கள் அமைத்து அதில் சங்கங்களின் கூட்டமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
அதே போல தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. அதனால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தனியாக வாரியம் அமைக்க வேண்டும். மேலும் கல்வி கட்டணத்தை கடந்த ஆண்டை விட 15 சதவீதம் உயர்த்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கான சொத்து வரிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்