அரசு பள்ளி மாணவிகளில் மேலும் 6 பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி – கட்டுப்பாடுகள் தீவிரம்!!
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் மாணவிகள் 56 பேருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர்களில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா பரவல்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக 10 மாதங்களாக வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்களுக்கு கற்றல் திறன் பாதிப்பு ஏற்படும் காரணத்தால் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க அரசு சில கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்திருந்தது. இருந்த போதிலும் பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் கொரோனா பரவ தொடங்கியது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகளில் 56 பேருக்கும், ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தேர்வர்களுக்கு பயிற்சி முகாம் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!!!
அதனை தொடர்ந்து அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் பெற்றோர் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் பெற்றோர்களில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.