‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தேர்வர்களுக்கு பயிற்சி முகாம் – மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்!!!
கூடலூர் வட்டார வள மையத்தில் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் கல்வி பயில்பவர்களுக்கான தேர்வு குறித்த பயிற்சி முகாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் நடந்தது.
‘கற்போம் எழுதுவோம்’ திட்டம்:
மத்திய அரசின் ‘கற்போம் எழுதுவோம்’ திட்டம் மூலமாக 15 வயதிற்கு மேற்பட்ட பள்ளி செல்லாதவர்களுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இதற்கான வகுப்புகள் துவக்க நடுநிலைப்பள்ளிகளில் தினமும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் மூலமாக கல்வி அறிவு இல்லாதவர்கள் கையெழுத்திடவும், வங்கி கணக்குகளை கையாளவும், பஸ் எண்களை அடையாளம் காணவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏப்.,1ம் தேதி முதல் தயார் நிலையில் வாக்குச் சாவடிகள் – பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவிப்பு!!
தேர்வுகள்:
கற்போம் எழுதுவோம் திட்டத்திற்கான தேர்வுகள் மார்ச் 27ம் தேதி ஒரே நாளாக நடக்க உள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தேர்வு அறை, தேர்வர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். இந்த தேர்வுகளை ஒரு மையத்தில் 20 பேர் வரை எழுதலாம். தேர்வுகள் மார்ச் 27ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.
பயிற்சி முகாம்:
‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் கூடலூர் மாவட்டத்தில் 541 பேர் 48 மையங்களில் கல்வி பயின்று வருகின்றனர். தேர்வுக்கான பயிற்சிகள் குறித்து தேர்வர்களுக்கு கூடலூர் வட்டார வள மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடந்தது. மேலும், தேர்வு நடக்கும் முறைகள் குறித்து உதவி திட்ட அலுவலர் பயிற்சியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்