தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின் கல்லூரிகள் மற்றும் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறந்த மகிழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.
தமிழக பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
ஜூன் வரை ‘ஆன்லைன்’ வகுப்புகள் மட்டுமே நடைபெறும் – சென்னை பல்கலை அறிவிப்பு!!
இந்நிலையில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் குறைந்து வருவதாலும் மாணவர்களுக்கு கொரோனா நோய் காரணமாக எந்த பாதிப்பும் இல்லாத காரணத்தால், மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கு பெற்றோர்களும் அனுமதி வழங்கிய நிலையில் பள்ளிகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
100 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் நிகழ்வு – அம்பாசமுத்திரம் மாணவி தேர்வு!!
இதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளியில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பல நாள் கழித்து பள்ளிக்கு மாணவர்கள் வருவதால் பெரும் ஆர்வத்துடன் வருகின்றனர். மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் கல்வி நிலையங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்