தமிழகத்தில் அக்.30 ஆம் தேதி 4 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் வருகிற அக்.30 ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொனில் முத்துராமலிங்க தேவர் உருவ சிலை இருக்கிறது. இவர் சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்லாமல் தேசமும், தெய்வீகமும் தனது இரு கண்களாக பார்த்தவர். இவருடைய 116வது பிறந்தநாள் வருகிற அக்.30 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இவருடைய பிறந்தநாள் குருபூஜையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். அதற்கு பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்!
இந்நிலையில் இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற அக்.30 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ளார்.