தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. மக்கள் அதனை சரியாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக பள்ளிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் 6600க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் நேரடியாக எழுதுவது கடினம். எனவே தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு? இன்று மாலை முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு முடிவுகளை தெரிந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு? இன்று மாலை முக்கிய அறிவிப்பு!
அதில் பாசிட்டிவ் வந்தால் அவர்கள் உரிய சிகிச்சை செய்து கொள்வார்கள். இதனால் பள்ளிகளில் கொரோனா பரவலை தடுக்கலாம். மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சந்தேகங்களை மட்டும் தீர்த்து கொள்ளும் வகையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். இதுகுறித்து அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.