தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு? இன்று மாலை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைப்பது குறித்து இன்று மாலை பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுத்தேர்வு ஒத்திவைப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல புதிய கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அவை ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக ஏற்கனவே பள்ளிகள் கடந்த ஆண்டு முதல் திறக்கப்படாமல் உள்ளன. 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா குறையாத காரணத்தினால் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.
ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பு இல்லை – மாநில அரசு முடிவு!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் மே மாதம் 3 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த அசாதாரண சூழ்நிலையில் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது சிரமம் என்பதால் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் 2.4 கோடி குழந்தைகளின் கல்வி கேள்விக்குறி!!
இந்நிலையில் இதுகுறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை பிளஸ் 2 தேர்வு அட்டவணை குறித்து பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பினை வெளியிட உள்ளதாகவும், ஆன்லைனில் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.