தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் 5 வரை பள்ளிகள் திறப்பு – தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 2 முதல் 5ம் தேதி வரை பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி செய்யுமாறு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பின்னர் தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு, மே 2 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 3ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் – மநீம தேர்தல் அறிக்கை!!
நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தவித தேர்வுகளும் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்படாது என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்குச்சாவடிகளை வெப் கேமரா மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகளில் கேமரா பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாகு அவர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் புதிய உத்தரவு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 2ம் தேதி முதல் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று முதல் 5ம் தேதி வரை பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.