இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், சில அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்:
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் பள்ளிகள் மூடப்பட்டது. இந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
IAS தேர்வுக்கான இலவச பயிற்சி – ஜனவரி 24இல் நுழைவுத்தேர்வு!!
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, வளாக தூய்மை என அனைத்தையும் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொரோனா அறிகுறி உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.
10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் சளி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். மேலும் பிள்ளைகளின் உடல்நிலை சீராக உள்ளதா? என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொள்ளுமாறும் கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்