தமிழகத்தில் அரசு பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை – தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு!!
மேட்டுப்பாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று முதல் வியாழக்கிழமை வரை 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா காரணமாக 10 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படாமல் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன. அரசு அறிவித்த கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகின்றன.
TN Job “FB Group” Join Now
ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது எனவும் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த காலம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான புஜங்கனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 வங்கிகளின் பாஸ்புக் ஏப்ரல் 1 முதல் செல்லாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
கொரோனா காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். அதில் 250 மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். தற்போது தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – எதிர்பார்ப்பும், ஏமாற்றமும்!!
அந்த பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக இன்று முதல் வியாழக்கிழமை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி அந்த பகுதி முழுவதும் பரவி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.