தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு, ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!!

0
தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு, ரூ.5000 நிவாரணம் - அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு, ரூ.5000 நிவாரணம் - அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு, ரூ.5000 நிவாரணம் – அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும், ரேஷன் அட்டைதார்களுக்கு தலா ரூ.5000 கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் பாதிப்பு அதிகபட்ச உச்சமாக 24,800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்திற்கு அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் இது குறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமலில் உள்ள நடவடிக்கைகள் பலனளிக்காத நிலையில் 2 வாரங்கள் தொடர் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவல் சங்கிலியை தகர்க்க முடியும்.

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி!!

அவ்வாறு 2 வாரங்கள் முழு ஊரடங்கு அறிவித்தால் மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் என்பதால் தமிழக அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது குறித்து தற்போது புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!