ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியீடு!!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் ரயில்களில் பயணம் செய்யக் கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளது.
ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 7000யை நெருங்கி உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொது இடங்களுக்கு வர வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் முன்பதிவு மூலமாக மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயணிகள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் இருந்தால் ரயில்களில் பயணம் செய்ய வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
மேலும் கொரோனா பாதித்தவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் போன்றவர்கள் ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும். ரயில் பயணத்தை பாதிக்காத வகையில் எந்த சுகாதாரமற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது. மேலும் பயணத்தின் போது இ-பாஸ் பரிசோதனை, கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் இவ்வாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.