தமிழகத்தில் அதிகளவு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா காரணமாக தனியார் பள்ளிகளில் 75 சதவிகிதத்திற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கல்விக்கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சில பள்ளிகள் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும் என கட்டாயப்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
எனவே அரசு சார்பில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் 35 சதவிகித கல்விக்கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பின்னர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காரணமாக 75 சதவிகித கட்டணம் வசூலிக்கப்படாமல் என உத்தரவிட்டது. இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது மீண்டும் தேர்தல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 53 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
இருந்த போதிலும் பள்ளிகளில் கட்டணத்தை வசூலிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், “தனியார் பள்ளிகள் விடுமுறை என்றாலும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும், இல்லையென்றால் நோட்டு புத்தகங்கள் வழங்க மாட்டோம் என வற்புறுத்தி வருகின்றனர்”, இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.