தமிழகத்தில் 53 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் 53 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன் பின் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தற்போது 53 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கல்லூரியில் உள்ள மாணவர்களில் 1,818 பேரில் 900க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாணவர்கள் தனிமைபடுத்தப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.