ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் இரவு மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து தற்போது தான் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் நேரத்தில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள கொரோனா தாக்கத்தில் 81 சதவிகிதம் பேர் இந்த மாநிலங்களில் மட்டுமே உள்ளனர். எனவே இந்த மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10% இடஒதுக்கீடு – மத்திய அரசு பதில்!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் 16,662 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் 2,48,604 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக மாணவர் சாதனை!!
மத்திய பிரதேச மாநிலத்தில் 9,746 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலம் முழுவதும் கொரோனா அதிகம் உள்ள பகுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கார்கோன், பெத்துல், சிந்த்வாரா மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த 7 மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.
வாரம் ஒருமுறை ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்