தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருந்த நிலையில், தற்போது மே 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேர்வு தேதி மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் காரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டு தற்போது வகுப்புகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் வருகின்ற ஏப்ரல் 16ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளன. இதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் விடப்பட்டு ஆய்வக பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் ஏப்ரல் 14 அன்று பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!
12ம் வகுப்பு மாணவர்களும் முழுவீச்சில் பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அரசு தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள் தயாரிப்பு, பதிவெண் ஒதுக்கீடு, தேர்வு மையங்கள் தயார் செய்தல் என மும்முரமாக பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாளே (மே 3) அன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அன்றைய தினம் மொழிப்பாடத் தேர்வு நடைபெற இருந்தது.
இந்நிலையில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மே 3ம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிற தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல்வர் வெளியீடு!!
கொரோனா பரவலால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? ஒத்திவைக்கப்படுமா? என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்