நாடு முழுவதும் ஏப்ரல் 14 அன்று பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!!
சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் புதன்கிழமை ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் பொது விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொது விடுமுறை:
இந்திய அரசியலமைப்பு மற்றும் ரிசர்வ் வங்கியின் தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர். இந்தியாவின் அரசியலமைப்புக்கு சட்டத்தில் இந்திய மக்களுக்கான உரிமைகள் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாவதற்கு உறுதுணையாக இருந்தவர் டாக்டர் அம்பேத்கர். இவரது பிறந்த தினம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இவரது பிறந்த நாள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கமானது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றால் அனைத்து அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் வர்த்தகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணிபுரியும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்? விரைவில் அறிவிப்பு!
இந்த ஆண்டு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாரம் 5 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் புதன்கிழமை (ஏப்ரல் 14) அன்று சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.