தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்? உரிமையாளர்கள் பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு மே 6 முதல் புதிய கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளது. இதில் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளை கொண்டு மட்டுமே இயங்க வேண்டும் என் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆம்னி பேருந்து இயங்காது:
தமிழத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக தற்போது தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் தொற்று பரவல் குறையாமல் மென்மேலும் உயர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மே 6ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன் படி அனைத்து அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிபுரிய வேண்டும். மளிகை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் முழு முடக்கம்? பிரதமர் மோடிக்கு உலக வல்லுநர்கள் வலியுறுத்தல்!!
மேலும் பேருந்துகள் 50 சதவீத பயணிகளை மட்டும் கொண்டு இயங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் மக்கள் அமர்ந்து பயணிக்க அரசு அனுமதியளித்துள்ளது.
இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வருமானம் இன்றி சிரமப்படுகிறோம் என பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து நிர்வாகிகள் உடன் இன்று மதியம் 1 மணியளவில் கலந்தாலோசிக்க உள்ளோம். இந்த கூட்டத்திற்கு பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுமோ? என்கிற அச்சம் நிலவுகிறது.