இந்தியா முழுவதும் முழு முடக்கம்? பிரதமர் மோடிக்கு உலக வல்லுநர்கள் வலியுறுத்தல்!!
அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் தேவையான அளவு கட்டுப்பாடுகளை அறிவிக்கவும் அல்லது முழு ஊரடங்கை அமல்படுத்தவும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முழு முடக்கம்
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிரான போரில் முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதம் மட்டுமே என தெரிவித்திருந்தார். தற்போது இந்தியா எதிர்கொள்ளும் இந்த சூழல் கொரோனாவின் மோசமான வெடிப்பு தான் இது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை உற்று நோக்குகையில், இந்தியா முழுவதும் திடீரென அறிவித்த முழு ஊரடங்கினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு மக்கள் இன்னல்களை சந்தித்தனர்.
கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் – பிசிசிஐ அறிவிப்பு!!
இப்போது நாடு முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டால், அது பொருளாதார பேரழிவாகும் அல்லது பொது மக்கள் பேரழிவை சந்திக்க நேரிடும் என கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் மருத்துவத்தின் தொற்று நோய் நிபுணர் தெரிவித்துள்ளார். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்காத வகையில், மக்களின் உயிர் காக்கக்கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய வங்கியாளர் உதய் கோடக் தெரிவித்துள்ளார். அதே நேரம் கொரோனாவால் ஒவ்வொரு நாளும் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது தவிர நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்க மருத்துவமனைகள் இல்லை, மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் காணப்படுகிறது. கூடுதலாக ஒவ்வொரு இந்திய வல்லுனர்களும், நிபுணர்களும் மக்கள் கூடுவதை தவிர்க்க சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், பொது முடக்கம் அறிவித்தால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்து வருகின்றனர். இறுதியாக மக்கள் அதிகம் கூடும் இடங்களை தடை செய்ய முடியாத பட்சத்தில் அந்த இடங்களில் மட்டும் முழு முடக்கத்தை அமல்படுத்தலாம் என வலியுறுத்தியுள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்