தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்? அரசு வட்டாரங்கள் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கைமீறி போய்க்கொண்டு உள்ளதால் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவை போன்றவை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருந்த போதிலும் கொரோனா வீரியம் குறைந்த பாடில்லை. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7981 ஆகும். இந்நிலையில் தற்போது அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இந்நிலையில் இன்று காலை தலைமை செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேர ஊடங்கு மட்டுமின்றி ஜிம், பூங்காக்களை முழுமையாக மூடுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் சென்று விட்டது என்னும் செய்தி மக்களுக்கு பீதியை கிளப்பினாலும் இனியாவது நோய் பரவாமல் தடுக்க அரசாங்கத்தின் அறிவுறுத்தல் களின் படி கட்டாயமாக சுய கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் நம்மையும் பாதுகாத்து கொள்ளலாம், நாட்டிற்கும் நல்லது
Including hotels, shops etc… Pls close at control of timing awernes ex: morning08:00 – 08:00 open time to provide as hotel, shops mey be pls …
Thank you
Kalaikkannan.P