பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் சேலம், திண்டுக்கல் என அடுத்தடுத்து பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள், ஜனவரி 19 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை விரைந்து நடத்தி முடிக்க வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வீடு கட்ட கடன் பெறும் நடைமுறை – அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் பள்ளி மாணவிக்கும், வேறு ஒரு பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

4.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி – தலைமை அதிகாரி தகவல்!!

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கூறியதாவது, ஏதாவது ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்காக பள்ளிகளை திறந்தது குறித்து கருத்து கேட்பது ஏற்புடையதல்ல. 98% பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்களின் விருப்பத்தின் படியே பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்காத போது, வீட்டில் இருக்கும் போது, விளையாடும் போது போன்ற சூழ்நிலைகளில் கொரோனா தொற்று ஏற்படலாம்.

எம்.பில் (M.Phil) மாணவர் சேர்க்கை ரத்து – அழகப்பா பல்கலை அறிவிப்பு!!

இது நிலையானது இல்லை. தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக பின்பற்றப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!