கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் அல்ல – சமஸ்கிருதம், ஹிந்தி கட்டாயம்!!
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயமல்ல என ஆர்டிஓ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
தமிழ் மொழி நீக்கம்:
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயமாக்குவது குறித்த சர்ச்சை பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் மொழி கட்டாயம் ஆக்குவது குறித்து ஆர்.டி.ஓ எனப்படும் தகவல் அறியும் சட்டம் மூலம் கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா அளித்த பதிலில், “தமிழ் மொழி கட்டாயம் இல்லை, ஹிந்தி, சமஸ்கிருதம் மட்டுமே கட்டாயம்” என பதில் அளித்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!
மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டாயம் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும். அவர்கள் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருதம் படித்து பாஸ் செய்தால் மட்டுமே 7 ஆம் வகுப்பு தேர்ச்சி அறிவிக்கப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சம்ஸ்கிருத மொழியை தவிர்த்து தமிழ் மொழியை படிக்க முடியாது. தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை”, இவ்வாறு கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்