தமிழக அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் – கல்வித்துறை முக்கிய முடிவு!!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பகுதி நேரமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்த முக்கிய முடிவை பள்ளிக்கல்வித்துறை தற்போது எடுத்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்:
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக கடந்த 2012ம் ஆண்டு முதல் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 12 ஆயிரம் ஆசிரியர்கள் பகுதிநேரமாக பணியாற்றி வருகின்றனர்.
124 ஆன்லைன் இளநிலை & முதுநிலை பட்டப்படிப்புகள் – யுஜிசி அறிமுகம்!!
அவர்களுக்கு வாரம் 3 நாட்கள் பணி இருக்கும். அதற்கு அரசு சார்பில் மாதம் 7,700 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. இதனை உயர்த்தி வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்யுமாறும் ஆசிரியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனை ஏற்காத தமிழக அரசு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதால் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தது.
பிரதமர் மோடியின் ‘மனதில் குரல்’ நிகழ்ச்சி – விழுப்புரம் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு!!
இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு ஆசிரியர்களின் விருப்பங்களை கேட்டறிந்து மாவட்ட வாரியாக பணியிட மாறுதல் வழங்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதனால் ஆசிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்