திறந்தநிலை பல்கலை வகுப்புகள் – அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழக திறந்தநிலை பல்கலைக்கழகம் தங்கள் பல்கலையில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்போர் உதவி மையங்களை அரசு கல்லூரிகளில் தொடங்கியுள்ளது. இங்கு பாடங்களை நடத்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழகம்:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் 42 இளநிலை பட்டப்படிப்புகளும், 38 முதுநிலை பட்டப்படிப்புகளும், டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் என மொத்தம் 60 பிரிவுகளில் பாடங்கள் நடத்துகிறது. திறந்தநிலை பல்கலையில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கற்றலுக்கு உதவியாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு கலை கல்லூரிகளில் 90 கற்றல் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் மூலமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டபடிப்பு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.
துணை மருத்துவ படிப்புகளுக்கானபொதுப்பிரிவு கலந்தாய்வு – இன்று தொடக்கம்!!
கவுரவ விரிவுரையாளர்களுக்கான வாய்ப்பு:
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இணைய வழியில் இந்த மையங்களில் பாடங்கள் நடத்தப்பட உள்ளது. உதவி மையங்களில் பாடங்களை நடத்துவதற்கு அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வாய்ப்பளித்தால் குறைந்த அளவிலான ஊதியம் வாங்கும் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
9 முதல் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!
பல்கலை கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர்:
இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணகுமார் அவர்கள், “கல்வி கற்போர் உதவி மையங்களில் மார்ச் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக கவுரவ விரிவுரையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அந்தந்த கல்லூரிகளில் ஆலோசனை நடத்தப்பட்டு, வகுப்புகளை எடுப்பதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்டு முடிவுகள் அனைத்தும் துறை தலைவர்களால் எடுக்கப்படும்” என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்