தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து – அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டம்:
தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைக்கேற்ற ஊதியம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்தனர்.
ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா, கல்லூரி – சேலத்தில் முதல்வர் திறந்து வைப்பு!!
இது குறித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், “அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அதேபோல் அவர்களின் முக்கிய போராட்டமான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது”, இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி பரிசீலனை செய்ய எத்தனை காலங்கள் ஆகும்?. அரசு ஊழியர்களை ஒய்வு பெற்ற பின் ரோட்டில் பிச்சை எடுக்க வைத்துவிடாதீகள்.