தமிழக அரசு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி – முதன்மை செயலாளர் அறிக்கை!!
தமிழகத்தில் உள்ள 19 அரசு நடுநிலை பள்ளிகளில் அரசு உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 95 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் வழங்க அனுமதி அளித்து அரசு முதன்மை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதன்மை செயலாளர் அறிக்கை:
தமிழக சட்டமன்ற பேரவை கூட்டத்தில் முதல்வர் அறிவித்த அறிவிப்பின்படி, 2016-17 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள 19 நடுநிலை பள்ளிகள் அரசு உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. அதில் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் என 95 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அந்த பணியிடங்களுக்கு 14.01.2018 முதல் 31.12.2020 வரை மட்டுமே தொடர் நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது அந்த தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவோருக்கு 01.01.2021 முதல் மூன்றாண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பானையினை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் 1,686 போலீசார் பாதிப்பு – 60 பேர் உயிரிழப்பு!!
இதனை பரிசீலனை செய்த அரசு இந்த தற்காலிக பணியிடங்களுக்கான ஏப்ரல் 2021 ஆம் மாதத்திற்கு ஊதியம் வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பானை (PA) வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகளை ஊதிய பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்பிக்கப்படும் பட்சத்தில் அவை அனைத்தும் சரியாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Private Teacher’s ku ethachum help pannalame