தமிழகத்தில் கொரோனாவால் 1,686 போலீசார் பாதிப்பு – 60 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 1,686 காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் முதல் அலை போல் இல்லாமல் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசுகள் கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமை அன்று முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுவார்கள் முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே. இதுவரை காவலர்கள் 1,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக அகமதிப்பீடு தேர்வுகள் – மே 18 முதல் தொடக்கம்!!
அதில் 808 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 878 காவலர்கள் தற்போது நோய் தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 60 பேர் கொரோனா தொற்று பாதித்து இறந்துள்ளனர். 97 ஆயிரம் பேருக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.