130 பணியாளர்களுக்கு பதவி உயர்வு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு!!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் 130 பணியாளர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பணியாளர்கள் பதவி உயர்வு:
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் பள்ளிகள் ஜனவரி மாதம் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன பாடங்களில் 30% குறைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு!!
இந்நிலையில் சூழ்நிலை சரி இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறப்பது தள்ளிபோய்க்கொண்டே உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த அறிவிப்பில் பொதுத்தேர்வுகள் முதல்வரின் ஆலோசனைப்படி கட்டாயம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இவ்வாறாக இருக்கும் சூழ்நிலையில் கல்வித்துறையில் 130 பணியாளர்களுக்கு, உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் “இந்தாண்டுக்கான மார்ச் மாதம் 15-ஆம் தேதி நிலவரப்படி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட 130 பேருக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலில் உள்ள 150 பேரில் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்து முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் வழங்கப்படும்”. என குறிப்பிட்டுள்ளார்.