10 & 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான காமராஜர் விருது – பிப்ரவரி 5 கடைசி நாள்!!
2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் தயார் செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.
காமராஜர் விருது:
2019-20 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ் வழியில் பயின்று சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குவது குறித்த விவரங்களை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய விவரங்களுடன் மாவட்ட கல்வி அலுவலர்களின் பரிந்துரையின்படி அரசுக்கு அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களுக்கான வெகுமதி தொகை வழங்கும் திட்டம் – பிப்ரவரி 19 கடைசி நாள்!!
இதன்படி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும், 12 ஆம் வகுப்பில் 15 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் மாவட்ட கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி சேகரித்து, அதனை முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதல்படி பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் [email protected] மற்றும் [email protected] என்ற இணையதளங்கள் மூலமாக அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்