தமிழக அரசின் 69 சதவிகித இடஒதுக்கீடு – உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு!
தமிழக அரசு சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அறிவிப்பு:
நாடு முழுவதும் 1992 ஆம் ஆண்டு 50 சதவிகிதத்திற்கு அதிகமான இடஒதுக்கீடு வழங்கப்பட கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து அளிக்கப்பட்ட மனுவில் மற்ற மாநிலங்கள் பிரதமரின் அனுமதியுடன் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்தி உள்ளதால் அதில் தலையிட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மற்ற மாநிலங்கள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த பதிலை பரிசீலனை செய்த உச்சநீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மூடல் – கல்வித்துறை மீண்டும் ஆணை!!
அதில், தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறைக்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. இதனை தவிர்க்க முடியாத சூழலில் மாநில அரசுகள் 50 சதவிகித ஒதுக்கீட்டிற்கு மேல் தாண்ட முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.